قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1)

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

مَلِكِ النَّاسِ (2)

(அவனே) மனிதர்களின் அரசன்;

إِلَٰهِ النَّاسِ (3)

(அவனே) மனிதர்களின் நாயன்.

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4)

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5)

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.