أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1)

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2)

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ (3)

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (5)

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7)

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.